3 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

0
9

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச கல்விப் பணிப்பாளர் திருமதி நிலானி தம்மிக்க தெரிவித்தார்.
அந்தந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இன்று மூடப்பட்ட கலிபானவளை உயர்தரப் பாடசாலை மாணவர்கள் வெல்லவாய கம்பஹா மகாவித்தியாலயத்திற்குச் சென்றுள்ளனர்.

பாறைகள் விழும் அபாயம் காரணமாக மூடப்பட்ட பிளாக்வுட் உயர்தரப் பாடசாலை கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக, அம்மாணவர்கள் ஹல்துமுல்ல தமிழ் உயர்தரப் பாடசாலைக்குச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here