தவக்காலத்தின் புனித வாரத்தில் பயணிக்கின்றோம். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பைத் தியானிக்கும் வேளையில் மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத் தந்தை கப்ரியேல் குணசேகரன் அடிகளாரினால் புனித வார வழிபாடுகள் இடம்பெறவுள்ளது. பெரிய வியாழன் வழிபாடுகள் மாலை 4.30 மணிக்கும், பெரிய வெள்ளி திருச்சிலுவை தியான யாத்திரை பி.ப 1.30 மணிக்கு மஸ்கெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமாகி, ஆலயத்தை வந்தடைந்தவுடன் வழிபாடுகள் ஆரம்பமாகும். தொடர்ந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஈஸ்டர் திருப்பலி ஆரம்பமாகும் அனைவரும் இயேசுவின் உயிர்ப்பை பக்தியுடன் அனுஷ்ட்டிக்க அழைக்கப்படுகிறீர்கள்.