புத்தளம் மாவட்ட நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

0
7

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இந்நிலையில் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் ஒரு அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செக்கனுக்கு 2040 கன அடி நீர் வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 2 அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் 4 வான் கதவுகள் ஒரு அடி உயரம் வரைத் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செக்கனுக்கு 4000 கன அடி நீர் வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here