சந்தன மரக் குற்றிகளை கடத்திய நபர் கைது

0
10

ஊவாபரணகம லத்தும பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் வெண் சந்தனம் கடத்திய நபரை கைதுசெய்த பொலீசார் லொரியினையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

லத்தும பிரதேசத்தில் நீண்ட காலமாக வெண் சந்தனம் கடத்தும் நபர் தொடர்பாக பொதுமக்களால் வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (12) பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

குறித்த சந்தேக நபர் வசமிருந்த சுமார் 40 லட்சம் ரூபா பெறுமதியான வெண் சந்தன மரக் குற்றிகளை கைப்பற்றியதோடு, சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தன மரக் கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலீஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here