செல்பியால் நிகழ்ந்த விபரீதம்!

0
3

செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கிருந்த சிங்கத்துடன் செல்பி எடுப்பதற்காக, அதன் அருகே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிங்கம் ஒன்று, அவர் மீது பாய்ந்து கடித்துக் குதறியது, அந்த இளைஞர் கூச்சலிட்டதால் அங்கிருந்த பணியாளர்கள், அவரை ஓடி வருமாறு அழைத்தனர். அதற்குள் அந்த சிங்கம் அந்த இளைஞரின் கழுத்தைப் பிடித்து கடித்துக் கொடூரமாக கொன்றது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here