இரு சிறுமிகளுக்கு நேர்ந்த பெரும் துன்பம்!

0
4

கருவலகஸ்வெவ, சாலியவெவ, சிரிசரவத்த பகுதியில் பல வருடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தமது 12 வயதுடைய மகள் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் அண்மையில் சாலியவௌ காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவருடன் வீடொன்றில் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் போது, குறித்த சிறுமி அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதும், அவரது 14 வயதுடைய மூத்த சகோதரியும் வேறு சிலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடுமையான பொருளாதாரச் சிக்கலை எதிர்நோக்கும் சிறுமிகளின் குடும்பத்திற்கு உதவி செய்யும் போர்வையில் சந்தேகநபர்கள் குறித்த சிறுமிகளை அழைத்துச் சென்று பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவர் கடந்த 19ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், மற்றுமொரு சந்தேகநபரை தேடி மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here