கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் முதலைகள் உலா வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
பொல்கொட ஆற்றில் முதலை உலாவும் காணொளி தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்