நாட்டிலுள்ள சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தீர்மானத்தின் பிரகாரம் இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ரீ 56 ரகத் துப்பாக்கி குறித்துத் தகவல் அளிப்பவருக்கு ஐந்து இலட்சம் (500,000) ரூபாய் வழங்கப்படவுள்ளது. அத்துடன், தானியங்கி ஆயுதங்கள் அல்லது கைத்துப்பாக்கிகளுக்கு மூன்று இலட்சம் (300,000) ரூபா வழங்கப்படும். ரிவோல்வருக்கு 250,000 ரூபாவும் வெகுமதியாக வழங்கப்படும் எனக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- அரசியல்
- உள்ளுர்
- பாதுகாப்பு
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்