சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் தொகை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த கடன் தொகை மூலம் நாடு கடின நிலையில் இருந்து காப்பாற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இறையாண்மைக்கு துரோகம் இழைத்த வெளிநாடுகள் அவர்களை விரும்பியவாறு கையாள்வதற்கு தயாரில்லை மேலும் ஒரு தலைமுறையை பிரிவினைவாதத்திற்குள் தள்ளுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போது அனிசப்ரி இவ்வாறு தெரிவித்தார்.