மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் இதன்றகான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தினூடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதனூடாக கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, அரசுக்கு சொந்தமாகும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here