வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்யத தேரர்

0
6

 

ஹப்புத்தளையில் உள்ள மகிரிபுர பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கு வருகை தந்த 26 வயதான போலந்து நாட்டை சேர்ந்த பெண் , தேரர் ஒருவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார் .
விசாரணையின் பிரகாரம் சந்தேக நபரான 17 வயதுடைய ஹப்புத்தளை மாகிரிபுர தேரர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here