கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் எழுதியுள்ள ‘ மலையகம் நிலைமாற்றத்தினை நோக்கி ‘ நூல் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.03.2024 ) பசறை நகரப் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். புளோரிடா (விரிவுரையாளர் –
கிழக்குப் பல்கலைக்கழகம் ) , ஆர். புஸ்பகாந்தன் ( விரிவுரையாளர் – வவுனியா பல்கலைக்கழகம்), பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி அதிபர் எஸ்.திருலோகசங்கர், ஊடகவியலாளர் அருள் கார்க்கி, சர்வமதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வர்த்தகச் சங்க பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைச் சிரேஷ்ட ஊடகவியலாளர், அறிவிப்பாளர் திரு. இராமன் கேதீஸ்வரன் தொகுத்து வழங்கினார்.
பிராந்திய செய்தி நிருபர் – கே.ஆர்.ஹெலன்