20 நாட்களில் டெங்கு நோயால் 3 பேர் பலி!

0
23

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த வருடத்தின் முதல் 20 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 7,507 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடுஇ அங்கு 1,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவதாக கொழும்பு மாவட்டத்தில் 1,536 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 637 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு போதாது என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here