இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

0
10

மேஷம் 

காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச் சினைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் உறவினர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும்.

ரிஷபம் 

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயன் உள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகள் அதிகரிக்கச் செய்யும்.

மிதுனம்

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

கடகம்

எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்துவிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்யவேண்டி வரும். துர்கை வழிபாடு வெற்றிகளை அதிகரிக்கச் செய்யும்.

சிம்மம் 

வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். விநாயகரை வழிபடுவதன் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி 

சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப் பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் அருகிலுள்ள கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். மகாலட்சுமியை வழிபட, தேவையான பணம் கிடைக்கும்.

துலாம் 

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு புதிய முயற்சிகளை வெற்றி பெறச் செய்யும்.

விருச்சிகம்

தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

தனுசு 

உற்சாகமான நாள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம் 

புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர் பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு தெய்வப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதால் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

கும்பம்

எதிர்பார்த்த பணம் கிடைப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்த்து வெற்றிகளைத் தரும்.

மீனம்

தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் சற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட சிரமங்கள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here