போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாள குழுக்களின் செய்ற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்றிலிருந்து (27) மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பண்டிகையின் காரணமாக பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் கடந்த மூன்று நாட்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நேர்ந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அதற்கமையை , கடந்த 25 ஆம் திகதிவரை மொத்தமாக 13,666 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களில் 1,097 பேர் மறுவாழ்வளிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.