மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய பிரித்தானிய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.அப்போது போக்குவரத்து துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவரை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
பிரித்தானியர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மது அருந்தி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.