பொங்கல் விழாவை கொண்டாடிய அட்டாம்பிட்டிய விவேகானந்தா வித்தியாலயம்!

0
7

பதுளை, அட்டாம்பிட்டிய விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் தேசிய பொங்கல் விழா நேற்று (22.02.2024) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ஆர். ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜோதிலட்சுமி, அட்டாம்பிட்டிய இலங்கை வங்கிக் கிளை முகாமையாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர். மேலும், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பொங்கல் வைத்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here