சத்தீஷ்கார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3-ம் திகதி நடைபெற்றது. பா.ஜ.க 54 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அங்கு பா.ஜ.க ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் தனது முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கவில்லை. புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் சர்பானந்தா சோனோவால் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோரை கட்சி மேலிடம் வெள்ளிக்கிழமை நியமித்தது.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் கூட்டம் சத்தீஷ்காரில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.