பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன

0
7

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி வீதி நிரம்பி வழிந்ததையடுத்து கல்லெல்ல மற்றும் மானம்பிட்டிய இடையிலான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சீரற்ற காலநிலை நிலவி வருவதால் வீதி போக்குவரத்தை மூடுவதற்கு பொலன்னறுவை பொலிஸ் போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்லெல்ல முதல் மானம்பிட்டிய வரையிலான வீதியில் வாகன போக்குவரத்து பிற்பகல் 2 மணி முதல் கனரக வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் நிலவும் மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் தலா 2 அடி வீதம் இரவு 10.00 மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்புக்கு செல்லும் வாகன சாரதிகள் கிரிதலே, எலஹெர, பகமுனை மற்றும் தெஹியத்தகண்டிய ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here