இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

0
8

மேஷம்
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். இன்றைய நாளை முருகப்பெருமானை வழிபட்டு தொடங்குவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவேண்டிய நாள். எதிலும் பொறுமை அவசியம். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்சினை ஏற்படக்கூடும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

மிதுனம் 

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் வகையில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். துர்கையை வழிபட முயற்சி வெற்றி பெறும்.

கடகம் 

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக்கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கனிவான அணுகுமுறை அவசியம். இன்று சிவபெருமானை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

சிம்மம் 

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வியாபாரத்தில் பணி யாளர்களால் பிரச்சினைகள் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட மன அமைதி உண்டாகும்.

கன்னி 

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக் கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு நலம் சேர்க்கும்.

துலாம் 

காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

விருச்சிகம்

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.

தனுசு 

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருப்பினும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படும். சிரடி சாய்பாபா வழிபாடு சந்தோஷம் தரும்.

மகரம்

அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைத்து மகிழ்ச்சி தரும். வியாபாரம் வழக்கம் போல நடைபெறும். முருகப்பெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

கும்பம்

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக் கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டு. மகாவிஷ்ணுவை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்

எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் இணக்கமான அணுகுமுறை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும். இன்று நன்மைகள் அதிகரிக்க தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here