படிப்படியாக அதிகரிக்கும் தொற்றுநோய் !

0
22

வயது வித்தியாசமின்றி அனைத்து மக்களிடமும் “டினியா” எனப்படும் தோல் நோய் படிப்படியாக தொற்றுநோய் வடிவத்தில் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த தொற்றுநோய் பெரும்பாலும் வியர்வை உள்ள இடங்களிலும் தலையைச் சுற்றியும் ஏற்படும் தன்மை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ஜனக அகரவிட்ட விசேட வைத்தியர் இந்திக கரவிட்ட உள்ளிட்ட வைத்தியர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் மக்களுக்கு மேலும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.இந்த நோய் தொற்று நிலை சொறி போல் தோன்றுவதாகவும் அரிப்பு முதன்மை அறிகுறியாக இருப்பதாகவும் வைத்தியக்குழு கூறியுள்ளது.

பொது கழிப்பறைகளை பயன்படுத்தும் போது தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த “டினியா” வகை தொற்று நோய் தற்போது வேறுபட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வீட்டில் உள்ள ஒருவருக்கு இதுபோன்ற நோய் கண்டறியப்பட்டால் துணிகளை தனி தனியாக வெந்நீரைப் பயன்படுத்தி துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த பூஞ்சை வெப்பநிலையால் அழிக்கப்படும் என்றும் நாட்டில் இந்நோய்க்கு ஏற்ற 10 வகைக்கும் குறைவான மருந்துகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நோய் தொற்றுக்கு வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் மருந்து பயன்படுத்த கூடாது எனவும் வைத்தியக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here