18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்க TIN இலக்கத்தைப் பிரதான இலக்கமாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரிப் பதிவில் TIN இலக்கம் வழங்கும் தொடர்பான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.