ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024 – 2025 என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் ஒன்று முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு, வருடாந்தம் இந்த நிதியுதவியை வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.
இந்த முழுமையான திட்டத்துக்கு 3,600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியம் ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.