எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவரின் தகவல்படி, எதிர்வரும் மார்ச் மாதத்துக்கான விலைசூத்திர அமுலாக்கலின் போது, எரிபொருள் விலையில் சிறியளவிலான அதிகரிப்பு ஏற்படும் என அறியமுடிகிறது.
உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள கணிசமான உயர்வே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.