மற்றும் ஒரு துப்பாக்கிச் சூடு!

0
3

காலி, எல்பிட்டிய – பத்திராஜவத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், வீட்டிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கரந்தெனிய பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகராகக் கடமையாற்றிவரும் 51 வயதுடைய ஒருவரெனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here