இலங்கையின் பொருளாதார நிர்மாணத்திற்கான குறுகிய கால உத்திகள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ சுற்றுலா ஊக்குவிப்பு, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் நேற்று (18) நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் பங்குதாரர் உரையாடலில் நிபுணர்களினுடான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோக்கத்திற்காக புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் இலங்கை தற்போது நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.