கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை 12 ஆம் மற்றும் 13 ஆம் வகுப்புக்களுக்கும் தற்போது 11ஆம் வகுப்பில் நடைபெறும் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சையை 10 ஆம் வகுப்புக்கும் மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை தொடர்பாக அவர் அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.