கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப்பொறுப்பு” சட்டமூலத்துக்கு சபாநாயரின் சான்றுரை
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2023 நவம்பர் 24 ஆம் திகதி “கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப்பொறுப்பு” எனும் சட்டமூலத்தில் சான்றுரை எழுதப்பட்டதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (25) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப்பொறுப்பு சட்டம் 2023 நவம்பர் 24 முதல் நடைமுறைக்கு வருகின்றது.