அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதமொன்றின் மூலம் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, புதிய சுற்றாடல் அமைச்சர் இன்னும் சில நாட்களில் பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.