இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இஸ்ரேலுடனான இலங்கையின் உறவைப் பாதிக்கும்.
இலங்கை ஊழியர்கள் போரினால் பாதிக்கப்படாத பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் குற்றசாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் மனுஷ கூறியுள்ளார்.