இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

0
8

மேஷம்

உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம் 

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படும்.  முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் குறையும்.

மிதுனம் 

பணவரவு அதிகரிக்கும் என்றாலும் மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.  வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிரடி சாய்பாபாவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைத் தவிர்த்துவிடலாம்.

கடகம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். வேங்கடேச பெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்  

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை எளிதில் முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் இன்றைய நாள் மகிழ்ச்சியானதாக அமையும்.

கன்னி 

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ள தாக இருக்கும். அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும். துர்கை வழிபாடு தடைகளைத் தகர்த்து வெற்றி பெற வைக்கும்.

துலாம் 

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டா கும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடுபடவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். குலதெய்வ வழிபாடு இன்றைய தினத்தை மகிழ்ச்சி உள்ளதாக மாற்றும்.

விருச்சிகம் 

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்களால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்தாலும், பணியாளர்களால் திடீர் செலவுகளும் ஏற்படும். சிவவழிபாடு சிரமங்களைப் போக்கும்.

தனுசு

நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாகக் கிடைக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் தடையின்றி சாதகமாக முடியும்.

மகரம் 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சினை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். பைரவரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம் 

இன்று சாதிக்கும் நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். அவர்களின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

மீனம்

அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் உற்சாகமாகச் செயல்பட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here