வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரிக்கு (VAT) பதிவு செய்ய வேண்டும் என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். பதிவுச் சான்றிதழை அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (ஜனவரி 18, 2023) காலை யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.