புத்தளம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 04 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
27 மற்றும் 35 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க, சுங்கத் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.