ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ADB அறிவித்துள்ளது.
குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களுக்கு இந்த தொகை இரண்டு பகுதிகளாக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால வேலைத்திட்டம் 2023 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்.
நீண்ட கால வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.