கிறிஸ்மஸ் விடுமுறையின் பின்னர் நேற்று (27.12.2023 ) நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் 1422 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 35 சந்தேகநபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருளுக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 73 சந்தேக நபர்களும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாகவும், 347 கிராம் ஹெரோயின், 827 கிராம் ஐஸ் மற்றும் 5 கிலோ மற்றும் 5 கிலோ மற்றும் 475 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here