மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதுகடுவ கடலுக்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர் (27.12.2023) மாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தாா்.இந்நிலையில் அவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் 16 வயதான நிசங்சல புஸ்பகுமார என்னும் பாடசாலை மாணவனாவார். அவறின் சடலம் இன்று (28.12.2023) அந்தப் பிரதேசத்தில் கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.