2025ஆம் ஆண்டுப் புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சொத்து வரி என்பது நேரடி வரி என்றும், அதிகச் சொத்து வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகைதான் வரி என்றும் நிதித்துறை அமைச்சர் இங்குக் குறிப்பிட்டார்.
கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்ககும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.