கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18% அதிகரித்த மின் கட்டணங்கள் 50% குறைக்கப்படவுள்ளதாக மின்சார அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று (04.01.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் கூறினார். நீர்மின்சாரத்தின் இலாபம் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார அதிகாரசபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here