பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவித்துள்ளது. வியாழக்கிழமை (8 பிப்ரவரி) நடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் 101 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 90 பேர் முன்னாள் பிரதமர் இம்ரான் (Imran Khan) கானின் தரீக்கே இன்ஸாஃப் கட்சியின் ஆதரவாளர்கள். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் (Nawaz Sharif) பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளை வென்றது.
பாகிஸ்தானில் அடுத்த அரசாங்கம் அமைக்கப் போவது யார் என்ற கேள்வி தொடர்கிறது.