தென் கொரியாவில் தொழில்துறை வேலை வாங்கித் தருவதாகக் கூறி 160 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கந்தானை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் இவருக்கு எதிராக கிட்டத்தட்ட இருபது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா தொடக்கம் 15 இலட்சம் ரூபா வரையான பணத்தைப் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here