மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

0
6

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த சந்தர்ப்பம் இதுவே ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 58 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 45 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை எனவும், ஏனையவை பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் சில மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here