வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்த ஒருவர் நாரஹேன்பிட்ட பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ஹோமாகம, கினிகத்தேனை, கம்பளை, வயங்கொடை, கந்தானை மற்றும் இரத்தினபுரி ஆகிய காவல்நிலைய பொறுப்பதிகாரிகளின் உத்தியோகப்பூர்வ முத்திரைகள் சந்தேகநபரிடம் இருந்து இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 61 வயதுடையவர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here