இந்த ஆண்டு இடம்பெறவுள்ள பிரதான பரீட்சைகள் தொடர்பான தகவல்களைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த ஆண்டுக்கான 5 ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ளது
இதுதவிர, இந்த ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரணத் தரப் பரீட்சை தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது