சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட நீதியமைச்சினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில், குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நல்லிணக்க அலுவலகங்களை நிறுவி, கிராமங்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.