நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட சபை உறுப்பினர் கௌரவ திலிப் வெத ஆரச்சி கறுப்பு சால்வாயை அணிந்துகொண்டு உரையாற்றினார்.மீனவர்களின் அவல நிலையை நாட்டுக்கு காட்ட வேண்டும் என்று கூறி கறுப்பு சால்வை அணிந்ததாக குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சு மீதான நாடாளுமன்ற வரவு- செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கௌரவ திலிப் வெதஆரச்சி தற்போது சுமார் மூவாயிரம் மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் காணப்படுவதாக குறிப்பிட்டார்.வற்வரி அதிகரிப்பினால் மீனவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here