ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு காலை மருந்து எடுத்துக் கொள்வதற்காக வந்த நபரை காட்டு யானை தாக்கியதாக லுணுகம்வெஹர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லுணுகம்வெஹெர மத்தள அளுத்கம பிரதேசத்தில் ஜே ஏ குணதாச (வயது 69) என்பவர் காட்டு யானை தாக்கி இன்று (28) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் காலை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறுவதற்காக பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here