இலவச PRE – PRIMARY திட்டம் .

0
6

4 வயது பூர்த்தியான குழந்தைகளை கட்டாயமாக பாலர் பாடசாலைகளில் சேர்க்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கான பிரேரணையை விரைவில் ehlhளுமன்றத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், PRE – PRIMARY திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகின்றார்.

நான்கு வயது பூர்த்தியான குழந்தைகளை கட்டாயமாக பாலர் பாடசாலைகளில் சேர்க்குமாறு கூறிய அமைச்சர், அதற்கான இயலுமை இல்லாத பட்சத்தில் அருகிலுள்ள பாடசாலைகளில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் 200ற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 4000 பாடசாலைகள் உள்ளதாகவும், 100ற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 2900 பாடசாலைகள் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால், கிராம மட்டத்தில் இலவச PRE – PRIMARY பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான தேசிய கல்வி நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக, தற்போது 11ம் தரத்தில் நடாத்தப்படும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை, தரம் 10ல் நடாத்த முடியும் என அவர் கூறுகிறார்.

அவ்வாறாயின், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை மாணவர்கள் 15 வயதிலும், உயர் தர பரீட்சையை 17 வயதிலும் எழுதுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here