இந்தியா – இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் பொலிஸார் அவர்களை விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.