அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு

0
6

அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு ஒன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்த இவ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அனைத்து கைதிகளின் விபரங்களும் தரவு அமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின் கீழ் போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் உள்ளீட்டையும் செயல்படுத்துவதன் மூலம் பொலிஸாரினால் கடந்த கால குற்றவியல் பதிவுகளை மீட்டெடுக்க முடியும்.

இந்த தரவு அமைப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று பொலிஸ் தலைமையகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here