அமெரிக்காவின் சிகாகோ போன்ற நகரங்கள் கடுமையான புயல்களால் பாதிக்கப்பட்டன. நேற்று பல விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புயலால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகாகோ விமான நிலையம் உட்படப் பல விமான நிலையங்களில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. இதுவரை சுமார் 2,000 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது